திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், பாலசுப்ரமணியர் கோவிலில் அமாவாசையுடன் இணைந்த கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராஜா குருக்கள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.