Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜூன் 3ல் திருமோகூர் கோயில் வைகாசி ... அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு ஆண்டாக காலியாக உள்ள அறங்காவலர்கள் பதவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2014
12:05

கோவை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கோவில்களில் அறங்காவலர் பதவி இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாததால் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 2011ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அறங்காவலர்கள் பதவி விலகும்படி அறிவுறுத்தப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பதவி விலகினர். பதவி விலகாத சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அறங்காவலர்கள் பதவி விலகி இரண்டு ஆண்டு ஆகி விட்டது. ஆனாலும் இதுவரை பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் ஆகியோருக்கு பக்தர்கள் சார்பில் பலமுறை நினைவூட்டு கடிதங்கள் அனுப்பியும் பதிலில்லை.அதிகாரிகள் உண்டியல் மற்றும் கோவில் வசூலை வைத்து நித்திய பூஜைகளை மட்டும் செய்ய முடிகிறது. உற்சவங்கள், திருப்பணி ஆகியவற்றை அறங்காவலர்கள் தான் முன்னின்று, நன்கொடைதாரர்கள் ஒத்துழைப்போடு செய்து முடிப்பார்கள். அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால், கோவை மாவட்டத்தில் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், கோவில்பாளையம், கவையகாளியம்மன் கோவில், காலகாலேஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் திருப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு உடனே அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். - நமது சிறப்பு நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar