அவலூர்பேட்டை: நீலாம்பூண்டியில் சாகை வார்த்தல் விழா நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் நீலாம்பூண்டி கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாரதனை நடந்தது. பிற்பகலில், கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலம் வந்தனர். திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.