Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நீலாம்பூண்டியில் சாகை வார்த்தல் திருக்கோவிலூர் இரட்டை விநாயகருக்கு சிறப்பு வழிபாடு திருக்கோவிலூர் இரட்டை விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிகார துணிகளால் சீர்கேடு: அவலத்தில் குச்சனூர் சனீஸ்வரர் கோயில்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 மே
2014
12:05

சின்னமனூர் : குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் உள்ள சுரபிநதியில், பக்தர்கள் பரிகார துணிகளை போடுவதால், மாசுபடுவதுடன் தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குச்சனூர் சனீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். சுரபி என்ற சிறப்பு பெற்ற நதி, சந்நிதியின் எதிர் புறத்தில் செல்கிறது. இந்த புனித நதியில்தான், பக்தர்கள் கை கால்களை கழுவியும், நீராடிவிட்டும் கோயிலுக்குள் செல்ல வேண்டும். பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள், ஐதீககத்தின் காரணமாக, குளித்துவிட்டு தங்களது உடைகளையும், பரிகார துணிகளையும், பிற பொருள்களையும் அந்த நதியிலேயே விட்டுச் செல்கின்றனர். இந்த துணிகளை எடுத்துக் கொள்ளும் டெண்டர் எடுத்துள்ள நபர்கள், அதில் புதிய துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பழைய துணிகளை அப்படியை நதியில் விட்டுவிடுகின்றனர். இதனால், இந்த நதியில் துணிகள் தேங்கி, நதி சுகாதார சீர்கேட்டில் சிக்கிக் கொள்வதுடன், தண்ணீர் செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. கோயிலில் பழைய துணிகளை எடுத்துக் கொள்வதற்கான டெண்டர் தொகை, ஒவ்வொரு ஆண்டும் பல மடங்கு அதிகமாகி வருவாயை கொடுக்கிறது. ஆனால் கோயில் நிர்வாகம், பழைய துணிகளை முறைப்படுத்தி, சுகாதாரத்தை பேண எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பக்தர்களின் பரிகார துணிகளை, கோயில் வளாகத்திலேயே போடும் வகையில் பெரிய தொட்டி அமைத்து, அதில் துணிகளை போட அறிவுறுத்தினால், பக்தர்கள் அதில் போட்டுச் செல்வர். அதுவும் செய்யப்படவில்லை. டெண்டர் எடுக்கும் நபர்களிடம், விதிமுறைப்படி நதியில் போடப்படும் அனைத்து துணிகளையும் எடுத்துச் செல்லவும் கண்டிப்பு காட்டுவதில்லை. இதனால், இந்த பரிகார துணிகளால் நதியும் கோயில் வளாகமும் சுகாதார சீர்கேடு அடைகிறது. இன்னும் இரு மாதங்களில் பெருந்திருவிழா துவங்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளில் தனி கவனம் கொண்டு செய்ய நிர்வாகம் முன்வர வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar