கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2014 11:05
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் தோஷ நிவர்த்தி வேண்டி, நிகும்பலா யாகம் நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பகுதியில் வடக்கு நோக்கி முகம் கொண்ட பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி நேற்று முன்தினம் மாலை நிகும்பலா யாகம் நடந்தது. அதையொட்டி பத்ரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குங்கும அர்ச்சனை, நிகும்பலா யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டி, பக்தர்கள் பத்ரகாளியம்மனை வழிபட்டனர். கோவில் நிர்வாகி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கோவிலில் வரும் ஜூலை 6ம் தேதி காலை கும்பாபிஷேக விழா நடக்கிறது.