பதிவு செய்த நாள்
31
மே
2014
11:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயில்களுக்கு செல்லும் பழக்கம் இன்று அனைவருக்கும் வந்து விட்டது. இதனால், பண்டைய மன்னர் காலத்து கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பண்டைய காலத்து கோயில்களில், கல் சிற்பங்கள் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிலைகள், இன்றும் பண்டைய கால மனிதர்களின் கலை வண்ணத்தை, நம்முன்னே காண்பிக்கிறது. பல இடங்களில் மன்னர் காலத்து ரோட்டோர மண்டபங்கள் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பின்றி இடிந்து வரும் நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தில், திருநீரு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அந்த மண்டபத்தில் நடனமாடிய நிலையில், 5 அரை அடி உயர நடராஜர், 2 அரை அடி உயர சிவகாமி அம்மாள், ஒரு அடி உயர காரைக்கால் அம்மையார் சிலைகள் கல்களில் செதுக்கப்பட்டுள்ளன. பார்ப்பவர்களை ஆச்Œரிய பட வைக்கிறது.இதை, இந்து கலாசார விரிவாக்க மையத்தினர் பராமரித்து வருகின்றனர். இது தொடர்பாக மைய நிர்வாகி கே.பி.செல்வகுமார் கூறுகையில், ""ஒரே பாறையில் சிலைகளை வடிவமைத்து இருப்பர். ஆனால் தனிக்கல்களில் ஒரே சிலையை வடிவமைப்பது சிரமமான காரியம். இதை பண்டைய காலத்தினர் திறம்பட செய்து, நடனமாடிய நிலையில் நடராஜர், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார் சிலைகளை வடிவமைத்துள்ளனர். இதை நாங்கள் பராமரித்து வருகிறோம் , என்றார்.