பதிவு செய்த நாள்
31
மே
2014
12:05
திருப்பூர் : திருப்பூர், பார்க் ரோட்டிலுள்ள ஸ்ரீராகவேந்திர ம்ருத்திகா பிருந்தாவன ஆலய கும்பாபிஷேகம், நாளை (1ம் தேதி) நடக்கிறது. திருப்பூர் பார்க் ரோட்டில், லட்சுமி நரசிம்மர், கிருஷ்ணர், சீதாராமர், ஆஞ்சநேயர், குரு ராகவேந்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (1ம் தேதி) நடக்கிறது. யாக பூஜைகள் நேற்று காலை துவங்கியது. காலை 8.00 மணிக்கு கணபதி பூஜை, புன்யாஹவாசனம், கஜ, அஸ்வ, கோ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ஜலாஹரணம், கலச ஸ்தாபனம், சோடசோபுசார பூஜை, யாகசாலை பிரவேசம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு, விஷ்ணு காயத்ரி, நாராயண அஷ்டாசர மந்திர ஹோமங்கள், வேதபாராணம், ஸ்வஸ்திவாசனம், பல மந்திராசதை நடந்தன.இன்று (31ம் தேதி), காலை 6.30 மணிக்கு, நரசிம்ம காயத்ரி, கிருஷ்ணமந்திர ஹோமங்கள், பிம்ப சுத்தி, நவ கலச அபிஷேகம், திரிவேத பராயணம், தான்யாதி வாசம், மங்கள ஆரத்தி, வேத பராயணம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (1ம் தேதி) காலை 6.00 மணிக்கு, ஸ்ரீராகவேந்திர அஷ்டாஷர மந்திர ஹோமங்களுடன் நிகழ்ச்சி துவங்கும். காலை 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. உடுப்பி, போஜாவர் மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ 1008 ஸ்ரீவிஸ்வேஸ தீர்த்த சுவாமிகள், கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடக்கிறது.