காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் திருக்குளம் தூர்வாரும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2014 02:05
காரைக்கால்: காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் திருக்குளம் தூர்வாரி மணல் கொட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவிலில் உள்ளது. இக்கோவில் சூரிய பகவான் பூஜித்ததால் இத்தலம் மேற்கு திசையில் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவரால் வழிபட்ட பாடல்பெற்ற ஸ்தலம் என்று கூறப்படும்.பார்வதீஸ்வர் கோவிலில் எதிரே உள்ள திருக்குளம் தூர்வாரி அழகுப்படுத்த முதல் கட்டமாக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில் குளத்தின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் குளத்தில் தடுப்புக் கட்டி மணல் கொட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது. கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீரசாமி கூறுகையில்.பார்வதீஸ்வரர் கோவிலில் உள்ள குளம் அழகுப்படுத்த ரூ.25 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடைபெறும் மேலும் இக்குளம் அம்மையார் திருக்குளம் போல் அழகுப்படுத்தப்படும் என்று கூறினார்.