பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட உண்டியலில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த, 3ம் தேதி முதல், 28ம் தேதி வரை பக்தர்கள் அளித்த காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில், உண்டியல் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில், 49 லட்சத்து, 56 ஆயிரத்து, 863 ரூபாய் ரொக்கமும், 585 கிராம் தங்கமும், ஐந்தரை கிலோ வெள்ளியும் இருந்தது.