காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவில் ரதம், பல்லக்கு வீதி உலா நேற்று நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப்(பெரிய பள்ளிவாசல்) 191ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று துவங்கியது. பகல் 3.30 மணிக்கு இரதம், பல்லக்கு ஊர்வலம் துவங்கியது. பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இரதம், பல்லக்குகள் பள்ளிவாசல் வீதி, லெமர் வீதி, பாரதியார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. வரும் 17ம் தேதி ஹலபு என்னும் போர்வை வீதி ஊர்வலமும், இரவு மின்சார சந்தனக்கூடு புறப்பாடு, சந்தனம் பூசுதல் நடக்கிறது. ஜுன் 20ம் தேதி கொடி இறக்குதல் நடக்கிறது. நேற்றைய பல்லக்கு ரதம் புறப்பாடில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.