பதிவு செய்த நாள்
09
ஜூன்
2014
12:06
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீ மிதி திருவிழாவில், காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை, தீமிதி விழாவும் நடந்தது. திருத்தணி அடுத்த, மேல்திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், மாலையில் உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு நடந்த படுகளம் நிகழ்ச்சியில், துரியோதனனை, பீமன் வதம் செய்தார். தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு, 2,000 பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி தீ மிதித்தனர்.