சிதம்பரம்: சிதம்பரம் சி.கொத்தங்குடி ஞான ஜோதி நகரில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாகிய ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 11ம் தேதி ஸம்வத்ஸ்ராபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி காலை 9 மணி முதல் 12 மணிக்குள் மகா கணபதி ஹோமம், ஸம்வத்ஸ்ராபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ஆறுமுகம் செய்து வருகிறார்.