செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. புதிதாக கும்பாபிஷேகம் நடந்த பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாள், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷகம் செய்தனர். மாலை 6.30 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலையில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 3 மணிக்கு நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சுவாமி கோவில் உலாவும் நடந்தது. மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ் வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன் நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.