கீழக்கரை : ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம பீடாதிபதி ஸ்ரீமத் ஆண்டவன் ரங்கராமானுஜ மகா தேசிகன் சுவாமிகள், விஜய யாத்திரையாக ஜூன் 16ம் தேதி திருப்புல்லாணிக்கு வந்தார். ஆதிஜெகநாத பெருமாள் கோயில் சார்பில், பேஷ்கார் கண்ணன் தலைமையில் வரவேற்றனர். திருப்புல்லாணி ஆண்டவன் ஆஸ்ரமத்தில் ஜூன் 20ம் தேதி வரை தங்குகிறார். பின் சேதுக்கரையில் புனித நீராடி, திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவிலில் மங்களாசாசனம் செய்கிறார்.