விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி.மேலக்கொந்தையில் புனித அந்தோணியார் ஆண்டு பெருவிழாவை யொட்டி ஆடம்பர தேர் பவனி நடந்தது. ஆர்.சி .மேலக்கொந்தை புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி கடந்த 5ம் தேதி மாலை 5 மணிக்கு சாம்ஸ் இயக்குனர் ஆல்பர்ட் பெலிக்ஸ் கொடியேற்றி திருப்பலியை துவக்கி வைத்தார். நேற்று முன்தினம் நடந்த பெருவிழா கூட்டுத் திருப்பலியை விக்கிரவாண்டி பங்கு தந்தை நாயகம் முன்னிலையில் மாதம்பட்டு பங்கு தந்தை ஜெகஜீவன் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை சாம்ஸ் இயக்குனர் அருள் தாஸ், மறை மாவட்ட பிரதிநிதி விக்டர் , உபயதாரர்கள் ரட்சகர் தாஸ் ராணி, வில்லியம்ஸ், ஆரோக்கிய எழிலரசி , சவுரி முத்து, அல்போன்ஸ், பல்தசார் பாத்திமா, சவரிமுத்து, வின்சென்ட் ராஜ்பாபுல ஜெசி மார்க்கரேட் உட்பட பலர் செய்திருந்தனர்.