சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேதாளத்துடன் தொடங்கிய தேரோட்டம், ரத வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலைக்கு வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.