காரைக்குடி: அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா தெப்ப உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை பகலில் தெப்பமும், இரவு அலங்கார பங்களா தெப்ப உற்சவமும் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.