பதிவு செய்த நாள்
19
ஜூன்
2014
10:06
தஞ்சாவூர்: ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை சார்பில் தஞ்சாவூரில், 80வது ஆண்டு கருட சேவை புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் பகல், 12 மணிக்கு, தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில், திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு திவ்யதேச பெருமாள்களுடன், கருட வாகனத்தில் புறப்பட்டு கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில், 11 மணி வரை திருவீதியுலா நடந்தது. இதில், நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிகுன்ன பெருமாள், வேளூர் வரதராஜபெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டி ராஜபாளையம் யோகநரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உட்பட, 23 கோவில்களில் இருந்து பெருமாள்கள் எழுந்தருளினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். மேலும், இன்று, 14 கோயில்களில் இருந்து பெருமாள்கள் புறப்பட்டு திருவீதியுலா நடக்கும்.