செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நித்ய பூஜைகள் துவங்கி 100வது நாளை முன்னிட்டு விசேஷ பூஜைகள் செய்தனர். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வழிபாடு செய்வதை தடை செய்ய கூடாது என செஞ்சி மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் மார்ச் 10ம் தேதி பக்தர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழிபாடு நடத்துவதை தடை செய்ய கூடாது என நீதிபதி வெங்கடேசன் இடைக்கால உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் மார்ச் 11ம் தேதி பக்தர்கள் குழுவினர் நித்திய பூஜைகளை துவக்கி தினமும் அபிஷேகம், அலங்காரம் செய்து வருகின்றனர். இதன் நுõறாவது நாள் நேற்று கொண்டாடினர். நேற்று வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. கடலுõர் தொகுதி முன்னாள் எம்.பி., அழகிரி, செஞ்சி வழக்கறிஞர்கள் பூபதி, வைகை தமிழ்ச் செல்வன், சக்திராஜன், தினகரன், திருவேங்கடகிரி கோவிந்தநாம சபாவினர், மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன சபையினர் மற்றும் செஞ்சி வட்டத்தை சேர்ந்த பஜனை குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.