குன்னூர் : குன்னூர் புனித அந்தோணியார் தேவாலயத்தில் தேர்பவனி நடந்தது. குன்னூர் புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு, ஊட்டி முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில் காலை ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. 11:30 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 5:15 மணிக்கு சிறப்பு திருப்பலி, மறையுரை, தேர்பவனி, நற்கருணை ஆசிர் ஆகியவை நடந்தன.