Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருநாகேஸ்வரம்- கீழப்பெரும்பள்ளதில் ராகு, கேது பெயர்ச்சி விழா கோலாகலம்! திருநாகேஸ்வரம்- ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணாடி கேட்கும் கற்குடை அய்யனார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2014
01:06

மேலூர் அருகே கொட்டகுடி கிராமத்தில் அமைந்துள்ளது  கற்குடைய அய்யனார் கோயில். ஆண்டு தோறும் ஐப்பசி மாத கடைசி செவ்வாய்  கிழமையில் இங்கு புரவி எடுப்பு திருவிழா கொண்டாடுவார்கள். இவ் விழாவில்  குழந்தைபாக்கியம், மழை பெய்து பூமி செழிக்கவும், நோய் நொடி  இல்லாமல் மக்கள் வாழவும் நேர்ந்து கொண்டு நேர்த்திக்கடனாக கண்ணாடியை செலுத்துவார்கள். கற்குடைய அய்யனாருக்கு, கண்ணாடி செலு த்தினால் வேண்டியது கொடுப்பார் என்பது ஐதீகம் என்பதால், கொட்டகுடி, மேலூர், கிளாதிரி, பூஞ்சுத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் கண்ணாடி செலுத்தி வருகின்றனர். இது தவிர வயல் வெளிகளில் நெற் கதிர்களை எலிகள் சேதப்படுத்துவதில் இருந்து தப்பிக்க எலி  சிலைகளும், விஷ ஜந்துக்கள் தொந்தரவில் இருந்து தப்பிக்க பாம்பு சிலைகளும், குழந்தை பாக்கியம் வேண்டி கொண்டவர்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பெரிய யானைகள் முதல் சிறிய பதுமைகள் வரை செலுத்தி வருகின்றனர். இக்கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு - ஆங்கிலேயர் காலத்தில் இக் கோயிலில் யானை சிலையை கண்ட ஆங்கிலேய மன்னன் கல் யானை  கரும்பு சாப்பிடுமா என ஏளனமாக கேட்டார். அதற்கு பூஜாரி சாப்பிடும் என கூறவே, மன்னனும்  ஒரு வண்டி கரும்பை கொண்டு வந்து யானை முன் போட்டு திரையை கட்டினார். பூசாரியோ மனமுருகி வேண்டியதை தொடர்ந்து கற்சிலை கரும்பை சாப்பிட்டது என்பது ஐதீகம். எனவே இன்றும் இக்கோவிலில் உள்ள யானை சிலைக்கு விவசாயிகள் த ங்கள் வயலில் விளைந்த  கரும்புகளை படையல் இடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar