வைத்திக்குப்பம் பஜனை கூடத்திற்கு ஸ்ரீஹரி அண்ணா நாளை வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2014 12:06
புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங் கடாஜலபதி பஜனை கூடத்தில் ஸ்ரீஹரி அண்ணா நாளை அருளாசி வழங்குகிறார். பரனுார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி சுவாமிகளின் மகன் ஸ்ரீ ஹரி அண்ணா, சாரதாம்பாள் கோவிலில், கடந்த 22ம் தேதி முதல் தினந்தோறும் மாலையில், ஸ்ரீமத் பாகவத் உபன்யாசம் செய்து வருகிறார். இவர், நாளை (27ம் தேதி) காலை 8:00 மணிக்கு, வைத்திக்குப்பத்தில் உள்ள வேங்கடாஜலபதி பஜனை கூடத்திற்கு வருகை தருகிறார். அங்கு, ராதா ருக்மணி சமேதர பக்தவச்சல பாண்டுரங் கனை தரிசித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.இதற்கான ஏற்பாடுகளை பஜனை கூடத்தினர் செய்து வருகின்றனர்.