Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பெருமாள் கோவில் கொடிமரம் பிரதிஷ்டை! கோவில் பூஜை பிரச்னை தீர்க்க மனு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி ஒப்பாரி தி.மலையில் நூதன வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2014
12:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மழை வேண்டி, உருவ பொம்மையை எரித்து, ஒப்பாரி வைத்து, நூதன போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சரியான முறையில் மழை பெய்யவில்லை. வரலாறு காணாத வகையில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு கிராமங்களில், மக்கள் மழை வேண்டி, நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில், மழை வேண்டி மக்கள் நூதன வழிபாடு நடத்தினர். கிராமத்தின் நடுவில் திரண்ட மக்கள் உருவ பொம்மை ஒன்றை தயார் செய்து, அதனை பாடையில் ஏற்றி, ஒப்பாரி வைத்து அழுதனர். பின், உருவ பொம்மை வைத்த பாடையை, தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக மயானத்துக்கு, தூக்கி சென்றனர். இறுதியாக சென்ற பொதுமக்கள், பாடையை இறக்கி வைத்து, இறுதி சடங்கு செய்தனர். அப்போது, ஊர் பெண்கள் கூடி, ஒருவரை ஒருவர், கட்டித்தழுவி ஒப்பாரி வைத்து அழுதனர். இதை அடுத்து, உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்தினர். பின், ஏரிக்கரையில் திரண்டு, பொங்கலிட்டு, சிறப்பு பூஜை செய்து மழை பெய்ய வழிபாடு நடத்தினர். இதனை காண, சுற்றுவட்டாரத்தில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar