பதிவு செய்த நாள்
08
ஜூலை
2014
12:07
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த அனுமந்தபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நாளை 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (8ம் தேதி) மாலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் முதல்கால யாகபூஜை நடக்கிறது. இரவு 7 மணிக்கு சண்முக சஷ்டாக்ஷர ஹோமம், சுதர்சன ஹோமம், இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. 9ம் தேதி காலை 6 மணிக்கு கோ பூஜை, நாடிசந்தனம், இரண்டாம் கால யாக பூஜையும், காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு முத்து மாரியம் மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன், நவகிரகம் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு முத்துமாரியம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன் சுவாமிகள் அலங்கார விளக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.