நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்÷ டஸ்வரம் ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோவிலில் கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் இரவில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஹஸ்ததாளாம்பிகை சமேதராய் நடனபாதேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை திருத்தேர் உற்சவமும், 12ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடக்கிறது.