பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
11:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, வரும் 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. மேட்டுப்பாளையம் அருகே வனபத்ர காளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா வரும் 22ல் பூச்சாட்டுடன் துவங்குகிறது. 25ம் தேதி லட்சார்ச்சனையும், 26ம் தேதி ஆடி அமாவாசையும், கிராம சாந்தியும் நடைபெற உள்ளது. 27ம் தேதி கொடியேற்றமும், அன்று இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. வரும் 28ல் பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்படுகிறது. 29ல் அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை 6.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி மாவிளக்கு படைத்தலும், பூ பள்ளக்கில் அம்மன் சுவாமி திருவீதி உலாவும், 31ம் தேதி இரவு பரிவேட்டையும், வாண வேடிக்கையும், 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 3ம் தேதி ஆடி பெருக்கும், 4ம் தேதி 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை துணை ஆணையர் (பொறுப்பு) பழனிக்குமார், பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.