பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
இனிமையாகப் பேசுவதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்புகிறார்கள். ஒருசமயம், ஒருவர் நபிகளாரைக் காண காத்து நின்றார். இதுபற்றி, நாயகம்(ஸல்) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்ட போது, ‘அவன் நல்லவனில்லை, இருந்தாலும் அவனை உள்ளே வரச்சொல்லுங்கள்,” என்றார்கள். அந்த மனிதரிடமும் பரிவுடன் பேசினார்கள். அந்த மனிதர் சென்ற பிறகு, நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா நாயகி, ‘அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள்,‘இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,” என்று பதிலளித்தார்கள். ஒருசமயம் நாயகம்(ஸல்) அவர்களைக் காண செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே நாயகம், தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து, அதில் அவரை அமரச்செய்தார்கள். பின், ஹலீமாவின் தாயார் வந்தார். அவருக்கு மற்றொரு முனையை விரித்து அமரச்செய்தார்கள். இதையடுத்து ஹலீமாவின் சகோதரர் வரவே, நாயகம் அவர்கள் எழுந்துகொண்டு விரிப்பைக் கொடுத்தார்கள். இதில் இருந்து அவர்களது அன்பான உபசரிப்பை உணரலாம். இந்தக் கனிவை நமக்குள்ளும் வளர்ப்போம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.25