திருத்தணி:திருத்தணி அடுத்த, எல்.என்.கண்டிகை கிராமத்தில், மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா, நேற்று நடந்தது.விழாவை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், பூ கரகம் ஊர்வலம் வந்தது. மாலை, 4:00 மணிக்கு, கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இரவு, 8:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன், சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.