டேராடூன் : உத்தர்காண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கேதார்நாத் யாத்திரை, இன்று (ஜூலை 16ம் தேதி) முதல் 18ம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுவதாக உத்தர்காண்ட் மாநில அரசு கூறியுள்ளது. சார் தாம் யாத்திரைக்காக கங்கோத்ரிக்கு சென்றுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அங்கு சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.