திருவெண்ணெய்நல்லூர்: மாமந்தூர் கிராமத்தில் பெரியாயி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 15ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி ÷ ஹாமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. இரவு 7:00 மணிக்கு முதல்கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 4:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, காலை மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 7:20 மணிக்கு கடம் புறப்பாடாகி ரவிச்சந்திரன் ரெட்டியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. சர்வசாதகத்தை அழகர்சிவம் செய்தார். ஏற்பாடுகளை தேவநாதன், பாலகிருஷ்ணன், ஜோதி, ராமமூர்த்தி, ஜெயச்சந்திரன் உட்பட பலர் செய்திருந்தனர்.