பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், உள்ள உண்டியலில், பக்தர்கள் 55.58 லட்சம் ரூபாய், 883 கிராம் தங்கம் காணிக்கை செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கை செலுத்துகின்றனர். கடந்த மாதம், 15ம் தேதி முதல், இம்மாதம் 14ம் தேதி வரை, பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளி மண்டபத்தில், 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை தனித்தனியாக பிரித்து எண்ணப்பட்டது. இதில், 55,58,724 ரூபாயும், 833 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளியும் கிடைத்தது. கடந்த மாதத்தை விட, இது 20 சதவீதம் அதிகம் ஆகும்.