ரெட்டியார்சத்திரம் : போழியம்மனூரில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மன் கண் திறப்பு, விசேஷ அலங்காரத்துடன் கிராம அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.