செஞ்சி: செஞ்சி தாலுகா அருகாவூர் ஊராட்சி சிவானந்தல் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடந்த 15ம் தேதி மாலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமமும், யஜமான பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியவை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு மங்கள இசை, யாகசாலை பூஜைகள் துவங்கின. 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.15 மணிக்கு கடம் புறப்பாடும், 10 மணிக்கு மகா கும்பாபிஷேமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.