பதிவு செய்த நாள்
18
ஜூலை
2014
12:07
திருவள்ளூர் : பூங்கா நகர் யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், காக்களூர் ஊராட்சி, பூங்காநகரில் யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், வியாழக்கிழமை தோறும், யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.நேற்று காலை, 9:30 மணிக்கு அபிஷேகம் துவங்கியது. பாலாபிஷேகம் முடிந்ததும், தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர், காக்களூர், பூங்கா நகர், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.