புதுச்சேரி நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2014 11:07
புதுச்சேரி: நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 31ம் ஆண்டு செடல் உற்சவம் மற்றும் தேர் வீதியுலா நடந்தது.புதுச்சேரி நயினார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 31ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணியளவில், செடல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, உடலில் செடல்போட்டும், உடலில் அலகு குத்தி வாகனங்களை இழுத்தும்,வேண்டுதலின்பேரில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலை 5:00 மணியளவில் தேர் வீதியுலா நடந்தது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி,எம்.எல்.ஏ., பாஸ்கர், சேர்மன் பாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேர் பவனியை துவக்கி வைத்தனர். தேர் புறப்பட்ட நேரத்தில் திடீரென்று பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்துச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி பழனிசாமி, விழாக்குழு தலைவர் ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.