பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
11:07
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். பொள்ளாச்சி அருகேயுள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில், நின்று அம்மனை தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆனைமலைஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிப்பாடுகள் நடந்தது. இதில் பெண்கள் அதிகஅளவில் பங்கேற்று, இறைவழிபாடு செய்தனர்.ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனைமலை பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் துவங்கினர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், தெய்வகுளம் காளியம்மன் கோவில், செமணாம்பதி உதிர காளியம்மன் கோவில், நவமலை பத்ரகாளியம்மன் கோவில், கோட்டூர் கமல காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.