திருக்கோவிலூர் மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2014 12:07
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தை மாரியம்மனுக்கு பக்தர்கள் 108 குடங்களில் பால் எடுத்து வந்து அபிஷேகம் நடத்தினர். காலை 7.30 மணிக்கு பக்தர்கள் தென்பெண்ணையில் நீராடி 108 பால்குடம் எடுத்தனர். ஊர்வலமாக சென்று கோவிலை அடைந் தனர். அம்மனுக்கு 108 பால் குடங்களையும் அபிஷேகம் செய்தனர். 12.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கலிட்டு பூஜை செய்தனர். அம்மனுக்கு காப்பு கட்டி சாகை வார்த்தலும், செடல் உற்சவம் நடக்கிறது.