ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2014 12:07
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை யொட்டி, நேற்று ஆண்டாள் பிறந்த துளசி மாடத்தில் இருந்து பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா நாளை (ஜூலை 22) காலை கொடியேற்றத்துடன் துவங்கி, ஜூலை 30 ல் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நிகழ்ச்சி நடந்தது.மாலையில் பெரியாழ்வார், சேனை முதல்வர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்டு நந்தவனம் அடைந்தனர். ஆண்டாள் பிறந்த இடமான நந்தவனத்தில் துளசி மாடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதிலிருந்து பித்தளை மண் வெட்டியால் பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.விஜி பட்டர் மண் வெட்டியால் மண்ணை எடுத்தார். இந்த மண்ணை யாகசாலையில் 12 சிறு பானைகள் வைத்து, முளைப்பாரி வளர்க்கப்படும் என, வேதபிரான் பட்டர் சுதர்சனன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.