பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
01:07
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது. காரிமங்கலம் அபிதா குஜாம்பாள் சமேத அருணேஸ்வர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு ஆடி கிருத்திகையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன், பக்தர்கள் செய்துள்ளனர். காரிமங்கலம் அடுத்த சென்னம்பட்டி முருகர் கோவில், மொரசுப்பட்டி முருகர் கோவிலில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காவடி எடுத்தல் நடக்கிறது.தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் நகர் சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், எஸ்.வி., ரோடு முருகன் கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வெள்ளி கவசம் சாத்துதல், சந்தனக்காப்பு அலங்காரம், காவடி எடுத்தல், திருவீதி உலா நடக்கிறது.