விழுப்புரம்: கோலியனூர் நவநீத ஆஞ்சநேயர் கோவிலில் ராமாயண தொடர் சொற்பொழிவு நடந்தது. கோலியனூர் தர்ம ரஷண சமிதி மற்றும் பலிஜ மகாஜன சங்கம் சார்பில் ராமாயண ஞான வேள்வி தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. கோலியனூர் நவநீத ஆஞ்சநேயர் கோவிலில் தினமும் மாலை 6: 00 மணி முதல் இரவு 8:30 மணி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடக்கிறது. கடந்த 19ம் தேதி ராமாயணம் அறிமுகம், மறுநாள் பால காண்டம் குறித்த சொற்பொழிவு நடந்தது. அயோத்தியா காண்டத்தை விளக்கி, நேற்று மாலை ஹரிஹரன் சொற்பொழிவு நிகழ்த்தினார். நாளை முதல் தொடர்ந்து சீதா கல்யாணம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் மற்றும் வரும் 27ம் தேதி ராமர் பட்டாபிஷேகம் பற்றிய சொற்பொழிவும் நடக்கிறது.