கும்மிடிப்பூண்டி : சிறுவாபுரியில், இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 750 பால்குட அபிஷேகம் நடைபெற உள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.அதை தொடர்ந்து, சுவாமிக்கு கல்பதித்த நகை அலங்காரம் மற்றும் சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற உள்ளது. காலை 11:00 மணிக்கு, 21 காவடி மற்றும் 750 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமும், அதை தொடர்ந்து, சுவாமிக்கு 750 பால்குட அபிஷேகம் நடைபெறுகிறது.