மாதவரம், லட்சுமிபுரத்தில், ஆடி முதல் வாரத்தை முன்னிட்டு, செல்லியம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மன், மாட்டு வண்டியில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். இதனை முன்னிட்டு, ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.