ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடிப்பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இரவு பிரம்மாண்டமான புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.இதில் வைக்கப்பட்டிருந்த வேம்புலி அம்மன், தாய் மூகாம்பிகை, ஐயப்பன், ஐஸ்வர்ய ஈஸ்வரர்-மகாலஷ்மி விஷ்ணு ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்ப பல்லக்கினை துவக்கினர்.புஷ்ப பல்லக்கு பழைய பேருந்து நிலையம் வழியாக வடக்கு மாடவீதி, பெரிய கடை வீதி, எஸ்.எம்.ரோடு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, காந்தி ரோடு வழியாக மீண்டும் கோயிலைச் சென்றடைந்தது.ஊர்வலத்தில் வாணவேடிக்கை, கரகாட்டம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் சனிக்கிழமை காலை வேம்புலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலை திரைப்பட இன்னிசை கச்சேரி நடைபெற்றது.இதில் திரைப்பட பாடகி அனுராதாஸ்ரீராம் கலந்துகொண்டு பாடல்களை பாடினார்.கச்சேரியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு இன்னிசைக் கச்சேரியை கண்டு ரசித்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.