Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் திருவிழாவில் வினோதம்: ... விருத்தாசலம் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு! விருத்தாசலம் கோவில்களில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
5ம் நூற்றாண்டு சமணர் படுகை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2014
11:07

வேலூர்: வேலூர் மாவட்டம், குக்கிராபள்ளி கிராமத்தில், 5ம் நூற்றாண்டை சேர்ந்த சமண துறவிகளின் படுகையை, சமண ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் சாலையில் குக்கிராபள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள பைரவ மலையில், 1,000 அடி உயரத்தில், 14 சமண படுகைகள் இருப்பதை, சமண ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில், ஒரே இடத்தில் 9 படுக்கைகளும், மற்றவை தனித்தனி படுக்கைகளாகவும், அருகில் சுனை (வற்றாத ஊற்று), இரண்டு கால் பாதங்கள் அமைந்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி, திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சமண ஆய்வாளர் ஜீவகுமார் கூறியதாவது: தமிழகத்தில், பல இடங்களில் சமணர் படுகைகள் உள்ளன. சமண துறவிகள் வாழ்ந்த இடம், ’பள்ளி’ என, அழைக்கப்பட்டது. இதனால், குக்கிராபள்ளி என பெயர் பெற்றுள்ள இந்த பகுதியை, ஆய்வு செய்தோம். இங்குள்ள பைரவ மலையில், 14 சமணர் படுக்கைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். இவை, கி.பி., 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை. சமண துறவிகள், மலைப்பகுதியில் படுகைகள் அமைத்து, அங்கேயே தங்கி, மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். கி.பி., 5ம் நூற்றாண்டில், இந்த இடம் சமணர்களின் முக்கிய மையப்பகுதியாக விளங்கியிருக்கலாம். ஆகவே, பழமையான இந்த மலைப்பகுதியில் உள்ள, சமணர் வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar