ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோவிலுக்கு, பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர், என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது: அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதையடுத்து, யாத்திரைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.