Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி சுப்பிரமணியருக்கு சந்தன ... தெருவடைச்சான் வீதியுலா! தெருவடைச்சான் வீதியுலா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துவ கோவில் தேர்த்திருவிழா: 3 மாநில பக்தர்கள் பக்தி பரவசம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
11:07

ராசிபுரம்: சவுரிபாளையம் கிராமத்தில் நடந்த கிறிஸ்துவர் தேர்திருவிழாவில், மூன்று மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்துவர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தில் விழா எடுத்து கொண்டாடினர். ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் அடுத்த, மதியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சவுரிபாளையத்தில், மரிய மதலேனாள் தேவாலயத்தில், குழந்தை பேறு, உடல், மன நோய் நீங்கல், தீய சக்தி பிடியில் இருந்து விடுதலை ஆகியவற்றிற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம், திருவிழா நடத்தப்படும். அதையடுத்து, கடந்த, 13ம் தேதி கொடியயேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், நவநாள், திருப்பலி, மறையுரை, கூட்டுத் திருப்பலி, நற்கருணை ஆராதனை, இன்னிசை நிகழ்ச்சி, தேர்பவனி போன்றவை நடந்தது.

நேற்று முன்தினம் இரவு, திருப்பலி, ஆயருக்கு வரவேற்பு, ஆடம்பர திருப்பலி, ஜெப வழிபாடு, கூட்டு பாடல் திருப்பலி, இரவில் குணமளிக்கும் ஜெப வழிபாடு நடந்தது. அதை தொடர்ந்து, நள்ளிரவு, 12 மணிக்கு மேல், புனிதையின் ஆடம்பரத் தேர்ப் பவனி நடந்தது. இதில், புனித மதலேனாள், புனித பிரான்சிங்கு சவேரியார், புனிதவனத்து அந்தோணியார், புனித ஆரோக்கியநாதனர், புனித மைக்கேல் சம்மனசு ஆகிய ஐந்து தேர்கள் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு தேவாலாயத்தை சுற்றி தேர்பவனி நடந்தது. தமிழகம், கேரளம், கர்நாடகாவைச் சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர் பங்கேற்றனர். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பேய் ஆட்டம் ஆடினர். அவர்களை, புனித மைக்கேல் சம்மனசு தேரின் அருகில் நிறுத்தி வழிபாடு நடத்தி, அனுப்பி வைத்தார். விழாவில், நேற்று காலை, 6 மணிக்கு, நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar