நெட்டப்பாக்கம்: பள்ளிச்சேரி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மாலையில் அதே பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.