பதிவு செய்த நாள்
28
ஜூலை
2014
12:07
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலையில், ஆடி அமாவாசையையொட்டி, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, நேற்றுமுன்தினம் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடிப்பட்ட சாகுபடி செழிக்க வேண்டும் என்பதற்காக, உடுமலை, ஆனைமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாட்டு வண்டிகளில், கோவிலுக்கு வந்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் வந்ததால், நெரிசலை தவிர்க்கும் வகையில், திருமூர்த்தி அணை படகுத்துறை அருகே, மாட்டு வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், முன்னோர்கள் வழிபாட்டிற்காக, பாலாற்றங்கரையில் பலர் திதி கொடுத்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் வரிசையில், நின்று இறைவனை தரிசித்தனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், ஐயப்பன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில்களில், இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். மேலும், பலரும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி முருகனுக்கு மாலை 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் முத்துமாரியம்மன் கோவிலில் காலை 6.00 மணிக்கு கணபதி பூஜையும், 7.00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக பூஜையும், 8.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஐயப்பசுவாமி கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில், சின்கோனா சக்திமாரியம்மன் கோவில், முடீஸ் மாரியம்மன் கோவில், சோலையார்டேம் சக்திமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.