Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் ஆடி ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் ஆடி அமாவாசை பக்தர்கள் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2014
12:07

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலையில், ஆடி அமாவாசையையொட்டி, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, நேற்றுமுன்தினம் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடிப்பட்ட சாகுபடி செழிக்க வேண்டும் என்பதற்காக, உடுமலை, ஆனைமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மாட்டு வண்டிகளில், கோவிலுக்கு வந்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமானோர் மாட்டு வண்டிகளில் வந்ததால், நெரிசலை தவிர்க்கும் வகையில், திருமூர்த்தி அணை படகுத்துறை அருகே, மாட்டு வண்டிகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், முன்னோர்கள் வழிபாட்டிற்காக, பாலாற்றங்கரையில் பலர் திதி கொடுத்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் வரிசையில், நின்று இறைவனை தரிசித்தனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், ஐயப்பன் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில்களில், இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். மேலும், பலரும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி முருகனுக்கு மாலை 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் முத்துமாரியம்மன் கோவிலில் காலை 6.00 மணிக்கு கணபதி பூஜையும், 7.00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக பூஜையும், 8.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஐயப்பசுவாமி கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில், ஈட்டியார் மாரியம்மன் கோவில், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில், சின்கோனா சக்திமாரியம்மன் கோவில், முடீஸ் மாரியம்மன் கோவில், சோலையார்டேம் சக்திமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar