புதுச்சேரி : ரெயின்போ நகர் துாய ஜான்மரி வியான்னி ஆலயத்தின் ஆண்டு பெருவிழாவையொட்டி, வரும் 3ம் தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. ரெயின்போ நகர் துாய ஜான்மரி வியான்னி ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் காலை 6.௦௦ மணிக்கு ஆராதனை, மாலை 6.௦௦ மணிக்கு சிறு தேர்பவனி மற்றும் திருப்பலி நடக்கிறது.திருப்பலிகளில் கள்ளக்குறிச்சி, வினோபா நகர், மேல்நாரியப்பனுார் போன்ற பகுதிகளில் இருந்து பங்குத் தந்தைகள், திருத்தல அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.முக்கிய விழாவான ஆடம்பர தேர்பவனி, வரும் 3ம் தேதி மாலை 6.௦௦ மணிக்கு நடக்கிறது. தேர்பவனியில் புதுச்சேரி-கடலுார் உயர் மறை மாநில பேராயர் ஆனந்தராயர் கலந்து கொள்கிறார்.விழா ஏற்பாடுகளை ரெயின்போ நகர் பங்கு பேரவைக் குழுவினர், பங்குத் தந்தை உள்ளிட்டோர் செய்துள்ளனர்.