பதிவு செய்த நாள்
29
ஜூலை
2014
11:07
சிதம்பரம்: கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலு த்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள், இரவு வீதியுலா நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேர் திருவிழாவும் நடந்தது. நேற்று தீமிதியை முன்னிட்டு விடியற்காலை 5 மணி முதல் அங்கப்பிரதட்சணம், அலகு போடுதல், பால்காவடி எடுத்தல் மற்றும் பாடை பிரார்த்னைகள் நடந்தது. 9 மணிக்கு தீக்குண்டத்தில் இறங்குபவர்களுக்கு காப்புக் கட்டுதலும், இதனைதொடர்ந்து சோதனை கரகம் எடுத்தல், அலகு தரிசன நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்குபஸ் நிலையம், எஸ்.பி., கோவில் தெரு, மாலைக்கட்டித்தெரு வழியாக சென்று பல்லாயிரகனக்கான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் 5.30 மணிக்கு கரகம் இறங்கியதைத் தொடர்ந்து பக்தி பரவசத்துடன் தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. தீமிதி உற்சவத்தில் கடலுõர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இஸ்பெக்டர்கள் லாமேக், முருகானந்தம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நகரில் கனரக வாகனப் போக்குவரத்தை தடை செ#து, பைபாஸ் சாலை வழியாக தி ருப்பி விடப்பட்டன. திருவிழாவிற்காக கீழ வீதி, அரசு மருத்துவமனை மற்றும் ஓமக்குளம் பகுதிகளில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி பயணிகளை இறக்கி ஏற்றிச் சென்றனர்.